துபாயில் உலக இந்தி மொழி தினம் அனுசரிப்பு

Image



துபாய் : துபாய் இந்திய கன்சுலேட்டில் உலக இந்தி மொழி தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு இந்திய துணை தூதர் டாக்டர் அமன் புரி தலைமை வகித்தார். அவர் இந்தி மொழி தினத்தை உற்சாகப்படுத்தும் வகையில் பங்கேற்ற அமீரகப் பிரமுகர்களை வரவேற்றார். மேலும் இந்திய பிரதமரின் உரையையும் வாசித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீரகப் பிரமுகர்கள் சிலர் இந்தி மொழியில் நகைச்சுவையோடு பேசி அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்தினர்.

நிகழ்வில் இந்திய கன்சுலேட் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.