இஸ்லாமியஇலக்கிய கழகம் நடத்திய மறைந்தார் நினைவேந்தல் நிகழ்ச்சி

Image



துபாய் :சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இஸ்லாமிய இலக்கிய கழகம் மறைந்தார் நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை காணொலி வழியாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் துபாய், மஸ்கட், ரியாத், குவைத் உள்ளிட்ட வளைகுடா பகுதிகளைச் சேர்ந்த இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய இலக்கிய கழக தலைவர் முனைவர் பேராசிரியர் சேமுமுகமதலி தலைமை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஏம்பல் தஜம்முல் முகம்மது, எஸ். எம். கனி சிஷ்தி, நரியம்பட்டு அப்துஸ் ஸலாம், நாச்சிகுளத்தார் முகம்மது யூசுப் ஆகிய இலக்கிய ஆளுமைகள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவர்களது இலக்கிய பங்களிப்புகள் குறித்து நினைவு கூறப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர், மூத்த துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான், இஸ்லாமிய இலக்கிய கழக நிர்வாகிகள் ஷாஜஹான், முனைவர் அஹமது மரைக்காயர், காயல் செய்யது அபுதாஹிர் ஆலிம், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், கவிஞர் மஸ்கட் பஷீர், குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் பொதுச் செயலாளர் கலீல் பாகவி, முஹிப்புல் உலமா கீழக்கரை முஹம்மது மஃரூப் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலர் கருத்துரை வழங்கினர்.