மஸ்கட்டில் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மஸ்கட் : மஸ்கட் இந்திய தூதரகத்தின் சார்பில் இந்திய தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி தொழிலாளர் முகாமில் நடந்தது.
இந்த முகாமில் இந்திய சமூக நல நிதி குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் தொழிலாளர்கள் மத்தியில் அதிகாரிகள் விவரித்தனர்.
இதில் தொழிலாளர்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தொழிலாளர்கள் கூறினர்.