பஹ்ரைனில் சிறப்புக் குழந்தைகள் மைய ஆண்டு விழா

Image



மனாமா : பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் சிறப்புக் குழந்தைகள் மைய ஆண்டு விழா நடந்தது.

பஹ்ரைன் இந்திய பெண்கள் சங்கத்தின் சார்பில் சிறப்புக் குழந்தைகளுக்காக ஸ்னேகா சிறப்பு மையம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த மையத்தின் மூலம் சிறப்பு குழந்தைகளுக்கு தேவையான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதன் 34 ஆவது ஆண்டு விழா நடந்தது.

இந்த விழாவுக்கு இந்திய தூதரின் மனைவி மோனிகா ஸ்ரிவாஸ்தவா சிறப்பு விருந்தினராக கலந் து கொண்டார் அவர் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

இதில் பெற்றோர்கள், மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.