முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் - உறுதிமொழி ஏற்பு

Image



தமிழக அரசின் உயர்கல்வித்துறை வழிகாட்டலின் படி, சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக 16/06/2022 அன்று "முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

கல்லூரி துணைமுதல்வர் முனைவர் A. ஜஹாங்கிர் அவர்கள் தலைமையில் மாணவ-மாணவியர் உறுதிமொழி ஏற்றனர்.

நிகழ்வினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் S. அஸ்மத்து பாத்திமா, முனைவர் M. பீர் முஹம்மது, முனைவர் A. அப்ரோஸ் மற்றும் முனைவர் M. சேக் அப்துல்லா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.