சர்வதேச யோகா தினம் - இணையவழி கருத்தரங்கு மற்றும் உறுதிமொழி ஏற்பு

Image



சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை சார்பாக 21/06/2022 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கல்லூரி முதல்வர் முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் உத்தரவின் பேரிலும் அழகப்பா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் P. சீனிவாசன் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் யோகா விழிப்புணர்வு இணைய வழி கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்புவிருந்தினராக கோயம்புத்தூர், ஸ்ரீ ராமகிருஷ்ணா உடற்கல்வியியல் கல்லூரி, பேராசிரியர் முனைவர் M. சீனிவாசன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் 70 மாணவ-மாணவியர் பங்கேற்றனர். மேலும் யோகாவை வாழ்க்கை முறையாக கொள்வேன் என்று உறுதிமொழி ஏற்றனர். நிகழ்வினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் S. அஸ்மத்து பாத்திமா, முனைவர் M. பீர் முஹம்மது, முனைவர் A. அப்ரோஸ் மற்றும் முனைவர் M. சேக் அப்துல்லா மற்றும் தேசிய மாணவர் படை அதிகாரி முனைவர் S. காளிதாசன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.