இந்தியன் சோசியல் ஃபோரத்தின் உதவியால் சவூதியில் இறந்தவரின் உடல் தமிழகத்தில் உள்ள அவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு

Image



ரியாத் : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவை சேர்த்தவர் "பெரியசாமி ஆறுமுகம்" (62). இவர் அபஹாவில் உள்ள "Southern gas என்ற தனியார் கம்பெனியில் 2011 ஆம் ஆண்டிலிருந்து வேலை செய்து வந்தார்.

கடந்த ஜனவரி 27- 2022 அன்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் அவரின் உடலை தயக்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு அவர்களுடைய உறவினரிகள் தமிழ் நாட்டில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியை அணுகினார்கள், அதனடிப்படையில் SDPI கட்சி நிர்வாகிகள் இந்தியன் சோசியல் ஃபோரம் ஜித்தா தமிழ் பிரிவு பொறுப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்தியன் சோசியல் ஃபோரத்தினரின் தொடர் முயற்சியாலும், இந்திய தூதரகத்தின் உதவியினாலும் இறந்த பெரியசாமி ஆறுமுகத்தின் உடல் 13-06-2022 அன்று இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், அவருடைய பணிப்பலன் தொகையையும் முழுமையாக பெறுவதற்கு அனைத்து உதவிகளும் செய்து கொடுத்தனர்.

இறந்தவரின் உடலை சென்னை விமான நிலையத்தில் பெற்று ஆம்புலன்ஸ் மூலமாக அவருடைய சொந்த ஊருக்கு கொண்டு சென்று உறவினர்களிடம் ஒப்படைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. SDPI நிர்வாகிகள் உடனிருந்து தேவையான உதவிகளை செய்தனர். அவருடைய குடும்பத்தினர் SDPI கட்சி நிர்வாகிகளுக்கு நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்து கொண்டனர்.