துபாயில் நடந்த ஓட்டப் போட்டியில் நாகர்கோவில் வீரர் இரண்டாம் இடம் பெற்றார்

Image



துபாய் : துபாய் நகரில் ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் மாரத்தான் உள்ளிட்ட பல்வேறு ஓட்டப் போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களும், அமீரகம் உள்ளிட்ட பிற நாட்டு வீரர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். துபாய் மெய்தான் பகுதியில் பத்து கிலோ மீட்டர், ஐந்து கிலோ மீட்டர், மூன்று கிலோ மீட்டர் மற்றும் 1 கிலோ மீட்டர் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. இதில் ஐந்து கிலோ மீட்டர் பிரிவில் தமிழகத்தின் நாகர்கோவிலைச் சேர்ந்த இளைஞர் செய்யது அலி 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் இரண்டாம் இடம் பெற்றார்.

அவருக்கு துபாய் விளையாட்டு கவுன்சிலின் அதிகாரி ஒருவர் கோப்பை வழங்கி கௌரவித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த செய்யது அலி அமீரகத்தில் மட்டுமல்லாது சமீபத்தில் மும்பை நகரில் நடந்த மாரத்தான் ஓட்டப் போட்டியிலும் பங்கேற்று அவரது வயதுக்கான பிரிவில் எட்டாம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல்வேறு போட்டிகளிலும் ஓடி வரும் அவர் வரும் காலத்தில் ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதே தனது விருப்பம் என தெரிவித்தார்.