அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் திருச்சிக்கு சிறப்பு விமானம்

Image



அபுதாபி : அபுதாபி அய்மான் சங்கம் தனது இரண்டாவது தனி விமான சேவையை 27/07/2020 அன்று அபுதாபியிலிருந்து தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி மாநகருக்கு இயக்கியது.

அபுதாபி வரலாற்றில் முதல் முறையாக குறுகியகால அறிவிப்பில் தனி விமான சேவையை அமீரகத் தலைநகர் அபுதாபியில் இருந்து தமிழகத்திற்கு இயக்கி அய்மான் சங்கம் சரித்திர சாதனை படைத்துள்ளது.

அய்மான் சங்கத்தின் மீது அமீரக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையால்,தொடர்ந்து நீங்கள் அடுத்து விமானத்தை இயக்கவேண்டும்,நாங்களும் அந்த விமானத்தில் தான் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க இரண்டாவது விமான சேவை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கடுமையான உழைப்பிற்கு பின் இறைவன் அருளால் 26/07/2020 மாலை 5 மணியளவில் போதுமான பயணிகள் ஊர்ஜிதப்படுத்தப் பட்டார்கள்.

உடனடியாக சில மணி நேரங்களில் அவர்களுக்கான விமான பயணச்சீட்டு அச்சடிக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த அரும் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சாதனை படைத்த அய்மான் சங்க நிர்வாகிகள் உழைப்பில் முதிர்ச்சிப் பெற்று, எந்த காரியங்கள் எப்போது வந்தாலும் அதை சாதிக்க துணிந்து நிற்பவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். .

இருப்பினும் அய்மான் சங்கத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையின் காரணத்தால் மிக கூடுதலான பயணிகள் குறைவின்றி பதிவு செய்து இந்த திட்டங்கள் நிறைவேற பயணிகளின் உற்சாகம் ஊக்கம் அளித்தது.

இந்த சேவை சிறப்பாக அமைய அய்மான் பொதுச் செயலாளர்ஏ.எஸ.அப்துல் ரஹ்மான் ரப்பானி, அய்மான் பைத்துல் மால் தலைவர் அதிரை.ஷாஹுல் ஹமீத், முன்னாள் பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது, அய்மான் துணைத் தலைவர் கீழக்கரை ஜமால்,பொருளாளர் லால்பேட்டை முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, துணைப் பொருளாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர்,மக்கள் தொடர்பு செயலாளர் பசுபதிகோவில் சாதிக் பாட்ஷா,அய்மான் பைத்துல் மால் செயலாளர் பார்த்திபனூர் நிஜாம் மைதீன்,மார்க்கத் துறை செயலாளர் மெளலவி ஹுஸைன் மக்கி ஆலிம்,செயற்குழு உறுப்பினர்கள் அதிரை.மாலிக், தேவிப்பட்டிணம் ஹாஜா முபீனுத்தீன், துணைப் பொதுச் செயலாளர் பூந்தை ஹாஜா உள்ளிட்ட மக்கள் சேவகர்கள் சிறப்பான முறையில் செயல்பட்டனர்.

தமிழ் மக்கள் மன்றத் தலைவர் திரு.சிவக்குமார்,அமீரக காயிதேமில்லத் பேரவை துணைப் பொதுச் செயலாளர் எம்.எஸ்.ஏ.பரக்கத் அலி, சொக்கம்பட்டி கபீர்,மக்கி பைசல்,ஜிஃப்ரி உள்ளிட்ட QMF நிர்வாகிகளும் தங்களது பங்களிப்பினை வழங்கினர்.

ராயல் சில்க்ஸ் நிறுவனத்திற்கும்,அதன் உரிமையாளர்களான சகோதரர்கள் மொய்தீன்,அஜ்மீர் ஆகியோருகம் அய்மானின் பணிகளுக்கு தங்களது ஒத்துழைப்பை வழங்கினர்.