குடும்பத்துடன் களித்திருப்போம் !

Image


கொடிய கொரோனா தந்துள்ள அறிய வாய்ப்பு
குடும்பத்துடன் கழித்திருப்போம் களித்திருப்போம் !
இயந்திரமயமான உலகில் இயந்திரமாக இருந்தோம்
இனியாவது அன்பு செலுத்தி மனிதம் பேணுவோம் !
நேரமில்லை என்று ஓடிக் கொண்டே இருந்தோம்
நின்று நிதானித்து மழலைகள் மகிழ்விப்போம் !

காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடினோம்
கனிவாக இல்லத்தில் அமர்ந்து பேசுவோம் !
பரபரப்பாக என்றும் இயங்கி வந்தோம்
பண்பாக அமர்ந்து பாசம் பொழிவோம் !
பம்பரமாக நாளும் சுழன்று வந்தோம்
பாதிப்பு வராமலிருக்க இல்லத்தில் இருப்போம் !
அடுத்து வீட்டுக்காரரை அறியாமல் இருந்தோம்
அடுத்த வீட்டாரை கொஞ்சம் அறிந்து கொள்வோம் !
வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருப்போம்
வளமாக நலமாக வாழ வழிகள் காண்போம் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Courtesy :Muduvai Hidayath