துபாயில் சீக்கிய மதகுரு குறித்த நூல் வெளியீடு
துபாய் : துபாயில் உள்ள குருத்வாராவில் சீக்கிய மதகுருவான குருநானக் தேவ்ஜியின் வாழ்க்கை வரலாறு குறித்த நூல் வெளியிடப்பட்டது.
இந்த நூலை இந்திய துணை தூதர் டாக்டர் அமன் புரி வெளியிட்டார். பின்னர் இந்த நூலை இந்திய துணை தூதர் டாக்டர் அமன் புரி, இந்தியாவுக்கான அமீரக தூதர் டாக்டர் அகமது அல் பன்னா, குருநானக் தர்பார் குருத்வாராவின் தலைவர் சுரேந்தர் சிங் கந்தாரி ஆகியோரிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.