துபாயில் சாதனை படைத்து வரும் தமிழக மாணவிகள்

Image



துபாயில் உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வரும் தமிழக மாணவிகள் பேச்சு, திருக்குர்ஆன் மனப்பாடப் போட்டி உள்ளிட்டவற்றில் பங்கேற்று தொடர்ந்து வெற்றிக் கோப்பைகளை பெற்று வருகின்றனர்.

துபாய் அல் நக்தா பகுதியில் உள்ள செண்ட்ரல் பள்ளிக்கூடத்தில் 3 ஆம் வகுப்பை எம். ஏ. நூருல் அஜ்நிஹாவும், நான்காம் வகுப்பை எம். ஏ. கன்சுல் அர்ஷியாவும் படித்து வருகின்றனர். இருவரும் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் வழுதூரைச் சேர்ந்தவர்கள் ஆவர். பெற்றோர் அபுதாஹிர் மற்றும் தஸ்லிம் ஆவர்.

இவர்கள் தமிழ் மொழியில் மிகவும் ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப் போட்டி உள்ளிட்டவற்றில் ஆர்வத்துடன் பங்கேற்று பரிசுக் கோப்பைகளையும் பெற்று வருகின்றனர்.

இது மட்டுமல்லாமல் அரபி மொழியையும், திருக்குர்ஆனின் பெரும்பாலான பகுதிகளை மனப்பாடம் செய்துள்ளனர். இது தொடர்பான போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுள்ளனர்.

மேலும் வீட்டில் தோட்டத்தில் கொரோனா உள்ளிட்டவற்றில் இருந்து பாதுகாக்கும் வகையிலான செடிகளையும் வளர்த்து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

இந்த தமிழக மாணவிகள் தொடர்ந்து பல சாதனைகளை படைக்க பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.