கவிக்கோ நினைவு ஹைக்கூ விருது - 2021

Image



தமிழில் முதன்முதலாக ஹைக்கூ கவிதை எழுதியதோடு, அதைப் பரவலாகவும் அறியச் செய்தவர் கவிக்கோ அப்துல்ரகுமான். வரும் ஜூன் 2-ஆம் தேதி கவிக்கோவின் 4-ஆம் ஆண்டு நினைவு தினம்.

இதனையொட்டி, ஹைக்கூ கவிஞரும் இளம் தொழில் முனைவருமான சேத்துப்பட்டைச் சேர்ந்த கவி.விஜய், உலகு தழுவிய தமிழ் ஹைக்கூ கவிதை நூல்களுக்கான போட்டி ஒன்றினை அறிவித்துள்ளார்.

2018, 2019, 2020 - ஆகிய மூன்று ஆண்டுகளில் வெளியான நூல்களின் 3 பிரதிகளை வரும் மே- 20-க்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.

POD எனப்படும் ஜெராக்ஸ் நூல்களும், மொழிபெயர்ப்பு நூல்களும் போட்டியில் ஏற்கப்பட மாட்டாது.

ஒரு கவிஞரே எத்தனை நூல்களை வேண்டுமானாலும் அனுப்பலாம்.

முதல் பரிசு ரூ. 10 ஆயிரம் - இரண்டாம் பரிசு ரூ. 5 ஆயிரம் - மூன்றாம் பரிசு ரூ. 3 ஆயிரம் - நான்கு நூல்களுக்கு ஆறுதல் பரிசு தலா ரூ.1000

ஆரணியில் வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள கவி.விஜய்-யின் ஹைக்கூ நூல்கள் வெளியீட்டு விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி : அகநி வெளியீடு, எண்: 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி - 604 408, திருவண்ணாமலை மாவட்டம்.

தமிழகத்தின் மூத்த ஹைக்கூ கவிஞர்கள் நடுவர்களாக இருந்து, விருதுக்கான நூல்களைத் தேர்வு செய்வர்.

கூடுதல் விவரங்களைப் பெற அழையுங்கள் : 96004 56606