துபாயில் தமிழக காங்கிரஸ் பிரமுகருக்கு வரவேற்பு

Image



துபாய் : துபாய் வருகை புரிந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவரும், சிறுபான்மை பிரிவின் தலைவரும், சமூக ஆர்வலருமான எஸ்.எம். ஹிதாயத்துல்லாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

துபாய் சமூக ஆர்வலர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முஹம்மது மைதீன் இல்லத்தில் நடந்த வரவேற்பில் பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அப்போது சமூக மற்றும் இலக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

சமீபத்தில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரிடம் இருந்து டாக்டர் பட்டத்துக்கான ஆ.முஹம்மது மைதீன் சான்றிதழை பெற்றார். இதற்காக அவரை பொன்னாடை அணிவித்து எஸ்.எம். ஹிதாயத்துல்லா கவுரவித்தார். அப்போது முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இளையான்குடி ஜமாஅத்.

இந்த சந்திப்பை தொடர்ந்து இளையான்குடி ஜமாஅத்தின் சார்பில் எஸ். எம். ஹிதாயத்துல்லாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது சமூக ஆர்வலர் அஷ்ரப் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் அபுதாஹிர், கபீர், பெரோஸ், பஷீர், சிராஜ, முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அப்போது அரசியல், சமூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் உலக அளவில் ஓவியப் போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் தஸ்னீம் அபுதாஹிருக்கு எஸ்.எம். ஹிதாயத்துல்லா பாராட்டு தெரிவித்தார். இதில் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.