சட்டவிழிப்புணர்வு நிகழ்ச்சி

Image



சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளையான்குடி நீதிமன்றம் இணைந்து 11.07.2024 அன்று சட்டவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அப்ரோஸ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார்.

சிறப்புவிருந்தினர்களாக இளையான்குடி, மாவட்ட முன்சிப் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி மற்றும் சிவகங்கை மாவட்ட சட்ட உதவிமையம், தலைவர் நீதிபதி ஹரி ராமகிருஷ்ணன், இளையான்குடி, பார் கவுன்சில், தலைவர் வழக்கறிஞர் சிவகுமார், இளையான்குடி, பார் கவுன்சில், செயலாளர் வழக்கறிஞர் கல்யாணி மற்றும் வழக்கறிஞர் பாலைய்யா ஆகியோர் மாணவ-மாணவியருக்கு சட்ட விழிப்புணர்வு வழங்கினர்.

நிகழ்வில் வழக்கறிஞர் குமார், உதவியாளர் சமயா பாண்டி, சட்ட உதவி மைய அலுவலர் இளவரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்வினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் சேக் அப்துல்லா மற்றும் மகேந்திரன் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இறுதியாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பாத்திமா கனி நன்றி கூறினார்.