கல்வி விழிப்புணர்வு மற்றும் அரசுப் பணி வழிகாடல் நிகழ்ச்சி

Image



பேட்மாநகரில் (தூத்துக்குடி மாவட்டம்) உள்ள M.K உயர்நிலை பள்ளியில் கடந்த சனிக் கிழமை (20-07-2024) காலை 10 மணிக்கு நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு மற்றும் அரசுப் பணி வழிகாடல் நிகழ்ச்சி!

கல்வியில் முன்னேற மணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள், பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்களிப்பு ஆகிய தலைப்புகளில் விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர் S. சித்தீக் M.Tech அவர்கள் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழிகாட்டல் வழங்கினார்.

பெரும் திரளாக மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட M.K (மதரஸதுல் கைரியா) உயர்நிலை பள்ளி நுற்றாண்டுகளை கடந்தும் தொடர்ந்து இயங்கி வருகின்றது.

பேட்மா நகர் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்.